தமிழ்நாடு அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் 2021 சித்திரை திங்கள் முதல் நாள் திருப்பேரூராதீனம் இருபத்தைந்தாம் குருமகா சன்னிதானங்கள் திருப்பெருந்திரு. சாந்தலிங்க மருதாசல அடிகளார் அவர்களை கௌரவ தலைவராகக் கொண்டு துவங்கப்பட்டது. பதிவு பெற்ற தன்னாட்சி அமைப்பான இச்சங்கம், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாநில நிர்வாக பெருமக்களைக் கொண்டுள்ளது. மேலும், கோவை, திண்டிவனம், புதுச்சேரி, வேலூர், திருக்கழுக்குன்றம், மகாபலிபுரம், நாமக்கல், தூத்துக்குடி, விழுப்புரம், காரைக்குடி கோபிசெட்டிபாளையம் முதலிய 13 மாவட்டங்களில் நேரடி நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது. ஐந்து உலக சாதனை நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளது. இணைய வழியாக, கவியரங்கம், கருத்தரங்கம், பேச்சரங்கம், பயிலரங்கம் முதலியன பன்னாட்டு அளவில் இதுவரை 224 நிகழ்வுகளை நிகழ்த்தி, இதில் கலந்து கொண்ட தமிழ் ஆர்வலர்களுக்கு நேரடியாக 7000த்திற்கும் மேற்பட்ட விருதுகளையும் 15,000த்திற்கும் மேற்பட்ட இணைய வழி சான்றுகளையும் வழங்கி சிறப்பித்துள்ளது. சங்கத்தின் வெளியீடாக 32 நூல்களையும் சங்க உறுப்பினர்கள் மற்றும் பிறரின் நூல்களாக சுமார் 250க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டு தமிழுக்கு தொண்டாற்றி வருகிறது.
அனைத்துலகப் பொங்குதமிழ்ச் சங்கம் வெளியிட்ட நூல்கள்
- நூல் 1 : காப்பிய மாந்தர்கள் தொகுதி 1
- நூல் 2 : காப்பிய மாந்தர்கள் தொகுதி 2
- நூல் 3 : பாவலர் சுந்தரபழனியப்பன் படைப்புலகம்
- நூல் 4 : பாரதியார் நூறு பாவலர் நூறு
- நூல் 5 : மாண்புடைய மகளிர்
- நூல் 6 : பாரதி(தீ)
- நூல் 7 : கவிமாலை
- நூல் 8 : கவிமலர்கள்
- நூல் 9 : பன்முகப் பார்வையில் கவிஞரேறு வாணிதாசன்
- நூல் 10 : மீண்டும் பிறந்து வா! பாரதியே!!!
- நூல் 11 : விடுதலை என்பது.
- நூல் 12 : ஹைக்கூ கவிதைகள்
- நூல் 13 : ஆய்வியல் அழகியல்..
- நூல் 14 : இந்திய இலக்கியங்களில் தகவல் தொடர்பு
- நூல் 15 : திருக்குறள் ஒரு குறள் ஓர் உரை
- நூல் 16 : திருக்குறள் 133 ஆளுமைகள் 133 கட்டுரைகள் தொகுதி 1
- நூல் 17 : திருக்குறள் 133 ஆளுமைகள் 133 கட்டுரைகள் தொகுதி 2
- நூல் 18 : இலக்கிய வரலாறு
- நூல் 19 : சுந்தரபழனியப்பன் படைப்புகளில் மானுடவியல் சிந்தனைகள்
- நூல் 20 : செம்மொழி வளர்க்கும் பொங்குதமிழ்ச் சங்கம்
- நூல் 21 : பன்முகப் பார்வையில் நாமக்கல் வெ. இராமலிங்கம் பிள்ளை
- நூல் 22 : கலைஞர் 100
- நூல் 23 : பன்னோக்குப் பார்வையில் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை
- நூல் 24: தாய்மொழி (2024 கவிஞர்கள் (ம) 2024 கவிதைகளின் தொகுப்பு நூல்)
- நூல் 25: பன்முகப் பார்வையில் பாவலர் சுந்தரபழனியப்பன்
- நூல் 26: பன்னோக்குப் பார்வையில் சிற்றிலக்கியங்கள்
- நூல் 27: வீரமங்கை வேலுநாச்சியார்
- நூல் 28: நண்மங்கல நாயகர் திருப்பெருந்திரு ராமசாமி அடிகளார்
- நூல் 29: திருக்குறள் கதைகள்
- நூல் 30: சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு
- நூல் 31: மாசிலா மாணிக்கம்
- நூல் 32: இலக்கிய உலகில் 25 ஆண்டுகள் பாவலர் சுந்தரபழனியப்பன்
- நூல் 33: பாவேந்தர் ஆய்வுக் கோவை